Sunday, November 21, 2010

திருமுறைகள்

திருமுறைகளையும் மெய்கண்ட சாத்திரங்களையும் இந்தி மொழிக்கு மொழிபெயர்க்கும் முயற்சி, கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வருகிற தகவல்களைத் தெரிந்து கொண்டேன்.

காசிப் பல்கலைக் கழகத்தில் சிவஞானபோதம் இந்தி மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது. அதனைத் தேவாரம் மின்னம்பல தளத்தில் சேர்க்க ஆவன செய்துள்ளேன். தட்டச்சாகி வருகிறது.

திருமந்திரம் முழுவதையும் 1997இல் வார்தாவில் காந்தி ஆச்சிரமத்தார் இந்தி மொழிபெயர்ப்பாக வெளியிட்டனர்.

திருமுறைகள் முழுவதையும் மொழிபெயர்க்குமாறு கொல்கத்தா, சாந்திநிகேதனத்தார் 1995இல் சென்னையில் இருந்து பேரா. சுந்தரத்தை அழைத்து, கொல்கத்தாவில் 3 ஆண்டுகள் தங்கவைத்தனர். அவர்,1,4,5,6,7,8 (திருவாசகம்) திருமுறைகளை இந்திக்கு மொழிபெயர்த்தார். அவரை அழைத்த பேராசிரியர் காலமாகிவிடவே, பிறர் ஆர்வம் காட்டாத நிலையில் அவர் சென்னை திரும்பினார்.

திருவாச இந்தி மொழிபெயர்ப்பை அக்காலத்தில் சாந்திநிகேதன் வெளியிட்டது.

சுந்தரர் தோவாரத்தை வார்தா காந்தி ஆச்சிரமம் வெளியிட்டது.
4,5,6 திருமுறைகளை பாடலிபுரப் பல்கலைக்கழகம் வெளியிட்டது.
1 திருமுறை கையெழுத்துப் படியாக உள்ளது.
11ஆம் திருமுறை திருமுருகாற்றுப்படையைத் திரு பாலசுப்பிரமணியம் செய்து வைத்திருக்கிறார்.

அருட்செல்வர் நா. மகாலிஙகம் பெரிதும் முயன்று, வண்ணப் படம் ஒரு பக்கம் கதை ஒரு பக்கம் வந்த பெரியபுராணம் நூலை இந்தியிலும் பலவேறு மொழிகளிலும் பதிப்பித்துள்ளார்.

பேரா. இரபீந்திரநாதர் சேத்து என்பர் மூலம் திருமுறைகளில் தேர்ந்த பாடல்களை இந்திக்கு மொழிபெயர்க்க, பல தொகுதிகாளாக அருட்செல்வர் நா. மகாலிங்கம் பதிப்பித்துள்ளார். அந்தப் பதிப்பை அக்காலத்தில் குடியரசுத் தலைவர் வெளியிட்டார்.

No comments:

Post a Comment